சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

716 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எண்வகைப் பொருள்கோள்
 

361 யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண்
தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
அடிமறி மாற்றுஎனப் பொருள்கோள் எட்டே.
 

 

இது முற்கூறிப் போந்த இயற்சொல் முதலிய நால்வகைச் சொற்களானும்
ஈட்டப்படும் செய்யுட்கு உரிய பொருள்கோளின் பெயரும் முறையும் தொகையும்
கூறுகின்றது.

இ-ள்: யாற்றுநீர்ப் பொருள்கோளும் மொழிமாற்றுப் பொருள்கோளும் நிரல்நிறைப்
பொருள்கோளும் பூட்டுவில் பொருள்கோளும் தாப்பிசைப் பொருள்கோளும்
அளைமறிபாப்புப் பொருள்கோளும் கொண்டு கூட்டுப் பொருள்கோளும் அடிமறிமாற்றுப்
பொருள்கோளும் எனப் பொருள்கோள் எட்டுவகைப்படும் என்றவாறு.

இவை அனைத்தும் காரணக்குறி என்று உணர்க. ஏனைய போல விகாரப்படாது
இயல்பாகவே தம்முள் கூடிப் பொருள் அற்று வருதலின், யாற்றுநீர்ப் பொருள்கோள்
முன் வைக்கப்பட்டது. ஏனையவற்றிற்கும் கிடக்கை முறைக் காரணம் கண்டுகொள்க. 67
 

விளக்கம்
 

பொருள்கோள்- பொருள் கொள்ளும் முறை. ஈண்டுப் பெயர் வினை இடை உரி
என்று நால்வகைச் சொற்களானும் அமைக்கப்படும் செய்யுளில் உள்ள சொற்களையும்
சொற்றொடர்களையும் பொருள் செய்யும் முறையே பொருள்கோள் எனப்பட்டது.

பொருள்கோள் நான்கு என்னும் தொல்காப்பியம்; ஐந்து என்னும் இறையனார்
அகப்பொருளுரை; நேமிநாதம், யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி என்பன
ஒன்பது