இது நிறுத்த முறையானே யாற்றுநீர்ப் பொருள்கோள் வருமாறு உணர்த்துகின்றது. இ-ள்: மேற் கூறிய பொருள்கோள் வகை எட்டனுள், ஏனைய அடிகளை நோக்காது அடிதொறும் பொருள் முடிவு பெற்று வருவது யாற்றுநீர்ப் பொருள்கோளாம் என்றவாறு. ஏனைய போல் விகாரப்படாது இயல்பாகவே தம்முள், கூடிப்பொருள் அற்று வருதலின்; ‘வான்பொருள்’ என்றார். |