சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

720 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒத்த நூற்பா
 

 

முழுதும்
‘யாற்றுப் புனலே அடிதொறும் பொருள்அற
வேற்றடி நோக்கா விளம்பலின் ஆகும்.’

‘எழுவாய் நதிப்புனல் எனப்பய னிலையொடு
முடிவன ஆற்றுநீர் ஆம்என மொழிப.’

 
நன்.412

தொ.வி.306



(மு.வீ.செய்யுளணி-22)

மொழிமாற்றுப் பொருள்கோள்
 

363 ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை
மாற்றிஓர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே.
 

 

இது நிறுத்த முறையானே மொழிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: தாம் குறித்த பொருளிற்குப் பொருந்திய மொழிகளை ஓரடியுள்ளே மாற்றிச்
சொல்லுதல் மொழி மாற்றுப் பொருள்கோள் என்றவாறு.

எ-டு:
                    ‘சுரைஆழ அம்மி மிதப்ப வரைஅனைய
                    யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப
                    கானக நாடன் சுனை.’

இதனுள் நின்றவழி நிற்ப இயையாமையின், சுரை மிதப்ப அம்மி ஆழ எனவும்,
யானைக்கு நிலை முயற்கு நீத்து எனவும் ஓரடியுள்ளே மாற்றிக் கூட்ட இயைந்தவாறு
காண்க.

இதனைச் சுண்ண மொழிமாற்று என்று ஈரடி இடத்தே கொள்ளின், ஏனை
அடிகளுள்ளும் ஏனைப்பாக்களுள்ளும் வரப்பெறாமையின் ‘மாற்றி ஓரடியுள் வழங்கல்
மொழிமாற்று’ என்றார். 59