காலம்காட்டிப் படுத்தல் ஓசையான் செயப்படுபொருள் மேல்நின்ற வினைப்பெயர். யான் சொன்னவன், உண்பவை நாழி என்றாற்போல்வன காலம்காட்டி ஓசை வேறுபாட்டான் அன்றித்தாமே செயப்படுபொருள் மேல்நின்ற வினைப்பெயர். உண்டல் தின்றல் என்றாற்போல்வன காலம்காட்டாது புடைப் பெயர்ச்சிமாத்திரமே உணர்த்தி நிற்கும் வினைப்பெயர். பூசல், வேட்டை என்றாற்போல்வன காலம் காட்டலும் புடைபெயர்ச்சி உணர்த்தலும் இன்றி நிற்கும் வினைப்பெயர் பிறவாற்றான்வருவன உளவேல் அவையும் கொள்க. ஏனை விகற்பம் எல்லாம் மேல் பெறப்படும். |