வில்லின் இரு முனையும் நாணால் இணைத்து வில்லினைத் தொழிற்படச் செய்தல் போலப் பாடலின் முதற்சொல்லும் ஈற்றுச் சொல்லும் பொருளான் இயைந்து பாடலைச் சிறக்கச் செய்யும் பொருள்கோள் விற்பூட்டுப் பொருள்கோளாம். இதனை மாறன் அலங்கார ஆசிரியர் பொருளணி வகையுள் ஒன்றாக்குவர். ‘திறந்திடுமின்’ என்ற பாடலில் ‘திறந்திடுமின் கதவு’
என்ற முதன்மொழியும் இறுதிமொழியும் இணைந்து பொருள் பட்டமை காண்க. |