ஊசலின் இடையே உள்ள தாம்பு ஊசலை இயக்குதற்கண் இரு மருங்கும் சென்று பயன்படுவது போல, ஒரு பாடலின் இடையில் உள்ள சொல் இருமருங்கும் சென்று பொருள் வரும் நிலை தாப்பிசைப் பொருள்கோளாகும். தாம்பு-கயிறு. இதனை இடைநிலைத்தீவகம் என்ற பொருளணிவகை யாக்கு அணிநூலார். ‘உண்ணாமை’ என்ற பாடலில் இடையில் உள்ள ஊண் என்ற சொல் முன்னும் பின்னும் வந்து ‘ஊன் உண்ணாமை’ ‘ஊன் உண்ண’ என்று பொருள்பட்டவாறு காண்க. |