சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

736 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இனி, இரட்டுறமொழிதல், என்பதனான், பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும்,
திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் என்பனவற்றிற்கு முறையானே தத்தம்பொருள்
உணர்த்தாது பெயர்ந்த நிலைமையை உடைய சொல்லான் வரும் செய்யுளும்,
திசைநிலையான் நிலைபெற்ற பெயரான் வரும் சொல்லும் எனப் பொருள் கூறி,
 

  ‘ஒள்வாள் கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப்பு அறியா வேலோன் ஊரே’
 

புறம்.323
என்புழி வேலோன் என்பதூஉம்,
 
  ‘செழுந்தா மரையன்ன வாட்கண்’ சீவக.8
 

என்புழி வாட்கண் என்பதூஉம் வேலை உடையோன் என்னும் பொருளும் வாள்
அன்னகண் என்னும் பொருளும் தம்நிலை பெயர்ந்து ஒரு பெயர்த்தன்மையவாய்
நின்றனவும், தென்னன் வடமன்- எனத் திசையான் நிலைபெற்ற பெயரான் வருவனவும்
‘கடப்பாடு இல’ என்று ஈண்டே அமைத்துக் கொள்க. 76
 

விளக்கம்
 

இந்நூற்பா உரை சேனாவரையர் உரையை ஒட்டி அமைந்து, பின் இரட்டுற
மொழிதல் என்பதனால் நச்சினாக்கினியர் உரையைச் சுட்டுவது.

புலி, பூசை என்ற திசைச்சொற்கள் ஆன் ஈறுபெற்றுத் தமிழ் இயற்சொல்போல
வந்தவாறு.

ஊர்க்கணக்கனுக்கு ஆண்டுதோறும் வழங்கவேண்டிய வருவாயைக் குயவன் தாராது
விடுத்தானாக, அதனால் உள்ளத்தே வெகுளியை மறைத்துக் குயவற்கு ஊறுசெய்தற்காங்
காலங்கருதிக் கணக்கன் புறத்தே நட்டு அகத்தே வேர்த்து இருந்தகாலை, ஊருக்கு
அண்மையில் அமைந்த காட்டாற்றில் வருநள் கரைபுரண்டுவந்த வெள்ளத்தில்,
நீர்இல்லாத நிலையில் அவ்வாற்றில் தொலைவில் புல் மேய்ந்துகொண்டிருந்த எருமைகள்
எதிர்பாராது வந்த வெள்ளத்தால் அடித்துவரப்