சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

74 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொல்காப்பியனார் பெயர்களின் வகைகளையே பெயரிய கூறிப்போந்தார்.
பெயரிலக்கணம் வேற்றுமைஇயலில் வேற்றுமைக்கு இலக்கணம் கூறிய வழியே
பெரும்பாலும் அமைந்து கிடந்தமையின், மீண்டும் பெயரியலில் அதனைக் கூறுவதற்கு
முற்படவில்லை.
 
 ‘கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப.’

தொல். சொல். 69
 
என்று உருபு பெயர்ப்பின் வருதல் கூறவே, உருபு ஏற்றலாகிய பெயர் இலக்கணமும்,
 
   ‘அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே’.
 
தொல்.சொல். 66
என்று எழுவாய் பயனிலை கொண்டு முடிதல் கூறவே பயனிலை கோடலாகிய
பெயரிலக்கணமும் பெறப்பட்டமையின் இயைபுபற்றி,
 
 ‘பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே.’

தொல்.சொல். 70
 
என்று காலம் தோற்றாமையும் வேற்றுமை யியலிலேயே கூறி விட்டார்.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

 ‘அவற்றுள்,
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம்மூ உருபின தோன்ற லாறே.’

‘இருதிணைப் பிரிந்த ஐம்பால் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயினான.’




தொல். சொல். 160


தொல்.சொல். 161