சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-77,78741

தொல்காப்பியனார் காலத்தில் மொழிக்குமுதலில் வாராத னரகம் பிற்காலத்து
வழங்குவதாயிற்று;
 

 

‘வளை சரியும்’
‘தையலாய் சமழாது உரை என்றதே’
‘சழக்கு இன்று நான் இசைந்தால்’
சலத்தால் பொருள்செய்து ஏமாத்தல்’ குறள்.
முதலியன காண்க.
 


சீவக.1000
பெரிய புராணம்
.
 

    ஒத்த நூற்பாக்கள்
 

  ‘கடிசொல் இல்லை காலத்துப் படினே.’
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.’
தொல்.சொல்.450

நன். 460
 

அதிகாரப் புறனடை
 

372 சொல்தொறும் இற்றுஇதன் பெற்றிஎன்று அனைத்தும்
முற்ற மொழிகுறின் முடிவுஇல ஆகலின்
சொற்றவற்று இயலான் மற்றைய பிறவும்
தெற்றென உணர்தல் தெள்ளியோர் கடனே.
 

 

இஃது அதிகாரப் புறனடை கூறுகின்றது.

இ-ள்: சொற்கள் தோறும் ‘இத்தன்மையை உடைத்து இச்சொல்லினது இயல்பு’
என்று அவை முழுதும் எஞ்சாமல் தனித்தனியே எடுத்து இலக்கணம் கூறத்தொடங்கின்
என்று காண்டல் அரிது ஆகலின், ஈண்டு இலக்கணம் கூறிப் போந்த சொற்களது
இயல்பானே இலக்கணம் கூறாத சொற்களையும் ஒப்ப நோக்கி விளங்கி அறிதல்
துணிவுடையோர் உடன் என்றவாறு.

வரலாறு: யானும் நீயும் அவனும் செல்வேம் என இடத்திற்கு உரிய சொற்களும்
தன்மையொடு