மேல் ‘ஒன்றற்கு ஏற்பவும்’ என்றவற்றுள் இஃது ஆண்பாற்கு உரிய பெயர் ஆமாறு கூறுகின்றது. இ-ள் மேற்கூறிய பெயர்களுள் நால்வகைக் கிளையும் எண்ணும் குழுவும் முதலிய பல்பொருளும், ஐந்திணையும் தேயமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலிய நிலனும் யாண்டும் பருவமும் திங்களும் நாளும் முதலிய காலமும் தோளும் குழலும் மார்பும்கண்ணும் காதும்முதலிய உறுப்பும் அளவும் அறிவும் ஒப்பும் வடிவும் நிறமும் கதியும்சாதியும் குடியும் சிறப்பும் முதலிய பண்பும், ஓதலும் ஈதலும் முதலிய தொழிலும் ஆகிய இவ்வறு வகையினையும் வினாவினையும் பிற என்பதனையும் மற்றை என்பதனையும் பொருந்திவரும் னகரஈற்றுப் |