சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1977

பெயர்களும், நம்பி- ஆடூஉ- விடலை கோ- வேள்- குரிசில்- தோன்றல் என்னும் தம்மை
உணர நின்ற பெயர் ஏழும் இவைபோல்வன பிறவும் ஆகிய பெயர்களும் ஆண்பாற்கு
உரிய பெயர்களாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

ஆண்பால் எனவே, உயர்திணை என்பதூஉம் ஒருமை என்பதூஉம் தாமே
விளங்கும். மேல்வருவனவற்றிற்கும் இவ்வுரை கொள்க.

வரலாறு: தமன்- நமன்- நுமன்- எமன் எனவரும் இத்திறத்தன நான்கும்
கிளைப்பெயர்; தம்மாள்- நம்மான்- நும்மான்- எம்மான் இவையும் அன்ன. ஒருவன்
என்பது எண்இயற்பெயர். அவையத்தான் - அத்தி கோசத்தான் என்றாற்போல்வன
குழூஉப்பெயர்; இளந்துணை மகார் தம்மில் கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குத்
தாமே படைத்து இட்டுக்கொண்ட பட்டிபுத்திரன் - கங்கமாத்திரன் என்றாற் போலும்
‘கூடிவருவழக்கின் ஆடியற்பெயரும்’ அன்ன. பொருளன் - பொன்னன் - முடியன்
என்றாற்போல்வன பொருட்பெயர். இவைஎல்லாம் பொருள்பற்றி வந்தன வெற்பன் -
பொருப்பன் - சிலம்பன் - கானவன் - குறவன் எனவும், எயினன் - மறவன் எனவும்,
நாடன் - பொதுவன் - அண்டன் - ஆயன் எனவும், மகிழ்நன் - ஊரன் - வினைஞன் -
களமன் எனவும், சேர்ப்பன் - துறைவன் - பரதன் - நுளையன் எனவும், அருவாளன் -
சோழியன் எனவும், அம்பர்கிழான்- பேரூர்கிழான் எனவும், கருவூரான் - கூடலான் -
உறையூரான் - எனவும்; வானான்- அகத்தான்- புறத்தான் எனவும், வரும் இத்திறத்தன
எல்லாம் இடம்பற்றி வந்த இடப்பெயர்; ஈராட்டையான் - மூவாட்டையான், எனவும்,
வேனிலான் - காரான், எனவும், தையான் - மாசியான் எனவும், ஆதிரையான் -
ஓணத்தான் எனவும், நெருநலான் - இற்றையான் எனவும் வரும் இத்திறத்தின எல்லாம்
கரலம்பற்றி வந்த காலப்