சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

80 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘அந்தணன் நாறும் ஆன்பால் அவியினை அலர்ந்த காலை நந்தியா வட்டம்
நாறும் நகைமுடி அரசன் ஆயின் தந்துயாம் உரைப்பின் தாழைத் தடமலர் வணிகன்
நாறும் பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான்’ சிந்.294

என்ற சிந்தாமணிப் பதுமையாரிலம்பகப் பாடலான் உணரப்படும்.

பின்னுள்ளோரை ஒட்டி வேள்-விடலை என்பன ஆண்பாற்பெயர் என்றாரேனும்,
விடலை முதலியன பொதுப்பெயராம் என்ற சேனாவரையர் முதலாயினார் கருத்தும்
இவருக்கு உடன்பாடாதல் பின்னர்க் குறிக்கப்படும்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

தொல்காப்பியனாரும் சின்னூலாரும் உயர்திணைப் பெயர் களைத்தனியே ஆண்
பெண் பலர் என்று பகுத்து நூற்பாயாக்காமல் மூன்றனையும் சேர்த்தே நூற்பா
யாத்துள்ளமையின், அவர்தம் நூற்பாக்கள் பலர்பால் பற்றிய நூற்பா இறுதியில்
சுட்டப்படும். (சின்னூல்-நேமிநாதம்)
 

  முழுதும் - நன். 276

[‘இவற்றொடு சுட்டு வினாப்பிற மற்றை’ என்ற அடி நன்னூலுள் ‘இவை அடை சுட்டு வினாப்பிற மற்றொடு’ என்றுள்ளது.]
 

  ‘னகார இறுதி குடிநிலம் குழூஉவினை
திணைநிலை சினைநிலை பண்புகொள் பெயரே
எண்ணும் பெயரொடு சுட்டு வினாப்பெயர்
உயர்திணை ஆண்பால் படர்க்கைப் பெயரே.
மு.வீ.பெ.19