சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1981

  ‘கோவேள் விடலை குருசில் தோன்றல்
ஆடூஉ நம்பியும் அதன்பால என்மனார்.’
மு.வீ.பெ.20


பெண்பாற்பெயர்
 

178 கிளைமுதலாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற்று இகரக்கு ஏற்ற ஈற்றவும்
தோழி செவிவி மகடூஉ நங்கை
தையலோடு இன்னன பெண்பால் பெயரே.

 

இது பெண்பாற்கு உரிய பெயர் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: மேல் கிளை முதலாகக் கூறப்பட்ட பொருட்பகுப்புகளுள் ளகர ஒற்றிற்கும்
இகரத்திற்கும் பொருந்திய ஈற்றின் வருவனவும், தோழி- செவிலி- மகடூஉ- நங்கை-
தையல் என்னும் தம்மை உணரநின்ற பெயர் ஐந்துடனே அவை போல்வன பிறவும்
பெண்பாற்கு உரிய பெயர்களாம் என்றவாறு.

‘ஏற்ற ஈற்றவும்’ என்றார், ளவ்வொற்று ஏற்பனவும், ஓகரம் ஏற்பனவும், இரண்டும்
ஏற்பனவும், இரண்டும் ஏலாதனவும் உள என்றற்கு.

வரலாறு: தமள் - நமள் - நுமள் - எமள் - எனவும், தம்மாள் நம்மாள் -
நும்மாள் - எம்மாள் எனவும், அவையத்தாள் - அத்திகோசத்தாள் எனவும், பொருளாள்
- பொன்னாள் - முடியாள் எனவும் இவ்வாறே னகர ஈற்றை ளகர ஈறாக ஏற்பன
அறிந்து ஒட்டுக. ஒருத்தி - குறத்தி - எயிற்றி - மறத்தி - ஆய்ச்சி - உழத்தி - பரத்தி
- அருவாட்டி - சோழிச்சி பேரூர்கிழத்தி - அம்பர்கிழத்தி - பழையனூர் உடைச்சி -
அரசூருடைச்சி - மானுடத்தி - தேவி - நரகி - பார்ப்பனி - வாணிச்சி - வெள்ளாடிச்சி-
படைத்தலைவி- சேனா- கணக்கச்சி- தச்சிச்சி என்றாற்போல்வன இகரம்