சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-2491

இ-ள்: கள்ளொடு சிவணாமையின் பால் வரையப்படாது நின்ற அஃறிணை
இயற்பெயர்கள் அத்திணை இருபாற்கும் பொதுவாய் நிற்றலை உடைய என்றவாறு.

வரலாறு: ஆ வந்தது வந்தன, குதிரை வந்தது வந்தன ஒன்று பல, குதிரை ஒன்று
பல எனவரும். 24


விளக்கம்
 

பழந்தமிழில் அஃறிணை இயற்பெயரே ஒருமை பன்மை இரண்டையும் குறிக்கப்
பயன்படுத்தப்பட்டது. அஃறிணை இயற்பெயர்கள்ளொடு சேர்ந்தவழிப் பன்மைக்கே
உரியது ஆகும் என்ற விதியிருப்பினும், கள்ளொடு சிவணுதலை மிக அருகியே
காணலாம் தொல்காப்பியனாரும் தம் நூற்பாவில்
 

  ‘நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்
அப்பால் மொழிகள் அல்வழி யான’
 தொல். 196

எனக் கள்ளீற்றை அருகியே வரப் பயன்படுத்தியுள்ளார்.

கள்ளொடு சிவணாதவழி ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நின்ற அஃறிணை
இயற்பெயர் இக்காலத்துப் பெரும்பாலும் ஒருமையே குறித்தல் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்

  ‘தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.’

முழுதும் -
‘அன்றியும் இருமைக்கு அஃறிணைப் பொதுவே.’

‘பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பால்தோன்றா
................அஃறிணைப்பேர்.’
தொல்.சொல்.171

நன். 281
தொ.வி. 80


நே.சொல்.37