சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-25, 2695

  ‘தந்தை தாய் என்பனவும் சார்ந்த முறைமையால்
வந்தமகன் மகளோ டாங்கவையும்- முந்திய
தாம்தானும் நீநீயிர் என்பன தாழ்குழலாய்
ஆய்ந்த விரவுப்பேர் ஆம்.
முழுதும்

‘சினைப்பெயர் முதற்பெயர் சினைமுதல் பெயரே
முறைப்பெயர் தன்மை முன்னிலைப் பெயரே
எல்லாம் பொதுப்பெயர் என்மனார் புலவர்.’
நே. சொல்.35
நன். 282



மு.வி.பெ. 27


அவற்றின் வகை
 

184 ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆம்அந் நான்மைகள் ஆண்பெண் அவற்றான்
முறைப்பெயர் இரண்டாம் என்மனார் புலவர்.
 

இதுமேல் தொகைப்படுத்து உரைத்த பெயர்களைவகைப்படுத்து உரைக்கின்றது.

இ-ள்: ஆண்மை முதலிய நால்வகையானே மேற் கூறிய முதற்பெயர் முதலிய
மூன்றும் ஒவ்வொன்று அங்ஙனம் கூறிய நான்காதல் தன்மையைப் பொருந்தும்; ஆணும்
பெண்ணும் ஆகிய இரண்டு வகையானே முறைப்பெயர் இரண்டு ஆதல்தன்மையைப்
பொருந்தும் என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.

வரலாறு: ஆண்மை முதற்பெயர் பெண்மைமுதற் பெயர் ஒருமை முதற்பெயர்
பன்மை முதற்பெயர் எனவும்,

ஆண்மைச்சினைப்பெயர் பெண்மைச்சினைப்பெயர் ஒரு மைச்சினைப்பெயர்
பன்மைச்சினைப்பெயர் எனவும்,

ஆண்மைச்சினைமுதற்பெயர் பெண்மைச்சினைமுதற்பெயர் ஒரு
மைச்சினைமுதற்பெயர் பன்மைச்சினைமுதற்பெயர் எனவும், ஆண்மை முறைப்பெயர்
பெண்மை முறைப்பெயர் எனவும் வரும்.