பக்கம் எண் :

நூலமைப்பு15

நூல் விளக்கம்

பெயரியல்

எண் சூத்திர எண்

159.

பார்வதியை மணந்து உலகினைக்காக்கும் சிவபெருமானுடைய திருவடிகளைப்பணிந்து சொல்பற்றிக் கூறுவேன் என்பது

1

160.

சொல்லாவது தனிமொழி தொடர்மொழி எனஇருவகைப்பட்டு, இருதிணை
ஐம்பாற் பொருளையும் தன்னையும், மூவகையிடத்தும், வழக்கின்கண்ணும்
செய்யுட்கண்ணும், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தெரிவிக்கும் என்பது

2

161.

தனிமொழி சமயஆற்றலால் பொருள் விளக்கும்;தொடர்மொழி அவாய்நிலை- தகுதி- அண்மைநிலை- இவற்றால் தொகைநிலையாகவும் தொகாநிலையாகவும் பொருளை விளக்கும் என்பது

3

162.

மக்கள் என்று நன்கு மதிக்கப்படும் பொருள்உயர்திணை, மக்களல்லாப் பிற பொருள் அஃறிணை என்பது

4

163.

உயர்திணை, ஆண் பெண் பலர் என மூன்றுபகுப்புக்களை உடையது என்பது

5

164.

அஃறிணை, ஒன்று பல என இரு பகுப்புக்களைஉடைத்து என்பது

6

165.

தெய்வமும் பேடும் தமக்கெனத் தனிப்பட்ட ஈறுஉடையன அல்ல; அவை உயர்திணைக்குரியஆண் பெண் பலர்பால் ஈற்றவாய் உயர்திணையாகும்
என்பது

7