174. | செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு கொடுந்தமிழ்நாட்டின்கண்ணும், பதினெண்நிலங்களுள்தமிழ் ஒழிந்த மற்றைப் பதினேழ் மொழி பேசும் நிலங்களின்கண்ணும் வழங்குஞ் சொல் தமிழ்மொழியில் கலந்துவரின் திசைச்சொல்லாம் என்பது |
16 |
175. | தமிழ் ஆரியம் என்ற இரண்டற்குரிய பொதுவெழுத்தானும் ஆரியத்திற்கேஉரிய சிறப்பெழுத்தானும், பொதுசிறப்பு என்ற ஈரெழுத்தானும், ஆக்கப்பட்டுத் தமிழியல்புக்கு ஏற்பத் திரிந்துவருவன வடசொல் என்பது |
17 |
176. | இடுகுறி - காரணம் - மரபு - ஆக்கம் பற்றி,வினையால் அணையும் பெயர் அல்லாதன காலங்காட்டாவாய், வேற்றுமை ஏற்றற்கு இடனாய்,திணைபால் இடங்களில் ஒன்றனை ஏற்பனவும்பொதுவுமாகிப் பொருளைப் புலப்படுப்பனவேபெயர்ச்சொல் என்பது |
18 |
177. | கிளைமுதலிய பொருள் - திணை முதலிய இடம்-யாண்டு முதலியகாலம் -தோள் முதலிய சினை-அளவு முதலிய பண்பு - ஓதல் முதலிய தொழில்- ஆகிய இவற்றைப்பற்றியும், சுட்டு - வினா-பிற-மற்று என்பன பற்றியும் வரும் னகரஈற்றுச்சொற்களும், நம்பி - ஆடூஉ- விடலை -கோ-வேள்- குரிசில்- தோன்றல் முதலிய சொற்களும் ஆண்பாற்பெயர் என்பது |
19 |
178. | முற்குறித்தவற்றைப் பற்றி வரும் ளகரஈற்றுச்சொற்களும், இகரஈற்றுச் சொற்களும், தோழி -செவிலி- மகடூஉ - நங்கை - தையல் முதலிய சொற்களும் பெண்பாற்பெயர் என்பது |
20 |