பக்கம் எண் :

நூலமைப்பு19

185.

பன்மை சுட்டிய முதற்பெயர், பன்மைசுட்டியசினைப்பெயர், பன்மைசுட்டிய
சினைமுதற்பெயர்என்ற மூவகைப்பட்ட பன்மைசுட்டிய பெயர்நீங்கலான
ஏனைய பதினொன்றும் இருதிணைக்கண்ணும் தத்தமக்குரிய ஆண்மை,
பெண்மை,ஒருமைப் பால்களை ஏற்கும் என்பது

27

186.

பன்மைசுட்டிய பெயர் மூன்றும் அஃறிணை ஒருமையையும் அத்திணைப்
பன்மையையும் உயர்திணைஆண் ஒருமையையும் உயர்திணைப் பெண்
ஒருமையையும் சுட்டும் என்பது

28

187.

தன்மை யான் - நான் - யாம் - நாம் என்றநான்கு; முன்னிலை எல்லீரும் - நீயிர் - நீவிர் -நீர் - நீ என்ற ஐந்து; ஏனைய படர்க்கை; எல்லாம் என்பது
மூன்று இடத்திற்கும் பொதுவானபெயர் என்பது

29

188.

தொழிற்பெயர் படர்க்கைஇடத்திற்கே உரித்து;வினையால் அணையும் பெயர் தனித்தனி மூன்றுஇடங்களுக்கும் உரிமை பூண்டு வரும் என்பது

30

189.

தான்-யான்-நான் - நீ என்பன ஒருமை; தாம்-யாம்-நாம்-எல்லாம்-எல்லீர் - நீயிர் - நீர்-நீவிர்என்பன பன்மை என்பது

31

190.

ஒருமையைப் பகுதியாகக் கொண்ட ஒருவன்ஒருத்தி என்ற சொற்களே உண்டு; இருவன்இருத்தி முதலிய சொற்கள் இல்லை என்பது.

32

191.

ஒருவர் என்பது ஆண்பால் பெண்பாலுக்குப்பொதுச் சொல்லாய்
விகுதிப்பற்றிப் பன்மைகொண்டு முடியும் என்பதும், ஆர்ஈற்றுப்பெயர்கள்
பன்மைவினைகொண்டு முடியும் என்பதும்இறைச்சி பொருள்வயின் வரும் பெயர்கள் ஈறுபற்றி உயர்திணை உணர்த்தாது அஃறிணைப்