| களினும், பொருள் - இடம் - காலம் என்றபிறிதின்கிழமைப் பொருள்களினும், இயற்கைமுதலிய முடிக்குஞ் சொற்கொண்டு முடியும்என்பது |
45 |
204. | ஏழம் வேற்றுமை உருபு கண் என்பது; அதுவினை செய்இடம் - நிலம் - காலம் என்றபொருள்களில் வரும்; அதன்கண் உருபின்பொருள்பட வருவன கண் - கால் - முதலியனவாம் என்பது |
46 |
205. | எட்டாம் வேற்றுமையாவது படர்க்கையோரைமுன்னிலை யாக்குவதாம்; அதன் உருபு பெயர்ஈறுதிரிதலும், குன்றலும், மிகுதலும், இயல்பும்,ஈற்றயல் திரிதலுமாம் என்பது |
47 |
206. | உயிர் ஈற்றுள் இ - உ - ஊ - ஐ - ஓ என்பனவும், புள்ளியீற்றுள் ன - ள - ர - ல - ய என்பனவும் உயர்திணைப் பெயர்களுள் விளியேற்கும்; இவ்வீறுகளுள் ஓ - ர - அல்லனவாகியஎட்டீற்றுடன் னகாரமும் ஆகாரமும் கூட்டப்பத்து ஈறுகள் விரவுப் பெயர்களுள் விளியேற்கும்;அஃறிணையில் எல்லா ஈறுகளும் விளியேற்கும்;இவற்றை உலகவழக்கும் செய்யுள் வழக்கும் பற்றிக் கொள்க என்பது |
48 |
207. | உயர்திணை விரவு அஃறிணைப் பெயர்கள் பொதுவாக இயல்பாகவும், ஏகாரம் பெற்றும், இகரம்நீண்டும் விளியேற்கும் என்பது |
49 |
208. | மூவகைப் பெயர்க்கண்ணும் ஐகாரம்ஆயாகவும்பொதுப்பெயர்க்கண் ஐகாரம் ஆவாகவும்திரிந்துவிளியேற்கும் என்பது. |
50 |