242. | பெயரெச்சம் பிறிது ஒரு பெயர் சார்ந்தும் வினையெச்சம் பிறிது ஒரு வினை சார்ந்தும் பொருள்முற்றுப் பெறும் குறைச் சொற்களாகி, இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் வரும் பொது வினையாம் என்பது | 16 | 243. | மூன்று காலங்களுக்கும் உரிய செய்த - செய்கின்ற - செய்யும் - என்னும் வாய்பாட்டினைஉடையதாய், பொருட்பெயர் முதலிய அறுவகைப் பெயருங்கொண்டு முடிந்து பொருள்முற்றும் இயல்பிற்றுப் பெயரெச்சம் என்பதும்,எதிர்மறைப் பெயரெச்சமும் குறிப்புப் பெயரெச்சமும் உள என்பதும் | 17 | 244. | செய்யும் என்னும் பெயரெச்சத்து ஈற்றயல் எழுத்தாகிய உயிர் மெய் கெடுதலும், உம் ஈறு உந்துஈறு ஆதலும், செய்யும் என்னும் வினை முற்றின்ஈற்றயலில் உள்ள உயிரும் உயிர் மெய்யும் கெடுதலும் செய்யுளகத்து உண்டு என்பது | 18 | 245. | செய்து செய்யூ முதலிய வாய்ப்பாட்டான்அமைந்து தன்வினை பிறவினை என்னும் இருதிறத்து வினைகளையும் கொண்டு முடிந்து வினையெச்சம் பொருள் நிரம்பும் என்பது | 19 | 246. | செய்து - செய்யூ- செய்யா - செய்பு - செய்தென - என்ற ஐந்து வாய்பாடுகளும் இறந்தகால வினையெச்ச வாய்பாடுகள்; செய என்பது நிகழ்கால வினையெச்ச வாய்பாடு; செயின்-செய்யிய- செய்யியர்- வான்- பான்- பாக்குஎன்ற ஆறும் எதிர்கால வினையெச்ச வாய்பாடுகள்; இவையன்றிக் கு, பின், முன், கால், கடை,வழி, இடத்து, இன்றி, அன்றி, அல்லது, அல்லால், ஏல், ஏன், ஆயினும், ஆனும், முதலியனவும் தெரிநிலை குறிப்பு வினையெச்ச வாய்பாடுகளாய் வரும் என்பது | 20 |
|
|
|