பக்கம் எண் :

30 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 நிலையாகவும் எழுவகையான் ஒன்றும் பலவுமாக வந்து பொருந்துவன
இடைச்சொற்களாம்என்பதும், இடைச்சொல் முன்னும் பின்னும்நிற்குமேனும் இடைநிற்றலே பெரும்பான்மையாதலின் இடைச்சொல் எனப்பட்டன என்பதும

1

252.

ஏகார இடைச்சொல் தேற்றம்-வினா- எண்-பிரிநிலை-எதிர்மறை-ஈற்றசை-என்ற ஆறு பொருளில் வரும் என்பது

2

253.

ஓகார இடைச்சொல் ஒழியிசை - வினா - சிறப்பு -எதிர்மறை - தெரிநிலை - கழிவு - பிரிப்பு - அசைநிலைஎன்ற எட்டுப்பொருளில் வரும் என்பது

3

254.

தெளிவுப்பொருளில் வரும் ஏகார இடைச்சொல்லும், சிறப்புப்பொருளில் வரும் ஓகார இடைச்சொல்லும் அளபெடுக்கும் என்பது

4

255.

என என்னும் இடைச்சொல்லும் என்று என்னும்இடைச்சொல்லும்
வினை-பெயர்- குறிப்பு-இசை-எண்-பண்பு என்ற ஆறு பொருளில் வரும்
என்பது

5

256.

உம்மை இடைச்சொல் எதிர்மறை-சிறப்பு-எண்-எச்சம்-முற்று-ஐயம்- தெரிநிலை-ஆக்கம் என்றஎட்டுப்பொருளில் வரும் என்பது

6

257.

முற்றும்மை எதிர்மறை வினைச் சொற் கொண்டுமுடியும்வழியே பெரும்பாலும் எச்சஉம்மையுமாம் என்பது

7

258.

உம்மையடுத்த சொற்றொடர்க்கு முடிக்குந்தொடர் செஞ்சொல்லாயின், அதனை முடிக்கப்படுவதாகக் கொண்டு முற்படக்கிளக்க என்பது
 

8