| | அறிதற்கு ஓதியவழிகளைச்சேராமல் கடைப்பிடித்துப் பாதுகாவலாகிய ஆணையின் கிளந்தவற்று இயலானே அவற்றையும் பகுதியுற உணர்க என்பதனால், உரு-உட்கு; புரை-உயர்வு, குற்றம்; மல்லல்- வளன்; ஏ- பெருக்கம்; உகப்பு- உயர்தல்; உவப்பு- உவகை; பயப்பு-பயன்; இயைபு- கூட்டம்; சீர்த்தி- மிகுபுகழ்; மாலை- இயல்பு; தீர்தல்- விடல்; பழுது- பயமின்மை; முழுது- எஞ்சாமை; வம்பு- நிலையின்மை; மாதர்-காதல்; புலம்பல்- தனிமை; துவன்றல்- நிறைவு; முரஞ்சல்- முதிர்வு; பொற்பு- பொலிவு; வறிது- சிறிது; எய்யாமை- அறியாமை; நன்று-பெரிது; தெவு-கொள்ளதல் தெவ்வு- பகை; கழுமம்- மயக்கம், திரட்சி; கருவி-தொகுதி; கமம்-நிறைவு; அரி-ஐம்மை; கவவு-அகத்திடுதல்; கவர்வு- விருப்பம், கைக்கொள்ளுதல்; சேர்-திரட்சி; வியல்-அகலம்; வய-வேட்கைப்பெருக்கம்; புனிறு-ஈன்றணிமை; யாண்- கவின்; ஐ- வியப்பு; முனைவு- முனிவு; வை-கூர்மை; எறுழ்- வலி; இருமை- கருமை, பெருமை; பசப்பு- நிறன்; சாயல்- மென்மை; வெம்மை- விரும்புதல்; வாள்- ஒளிமுதலியன பலவும் கொள்ளப்படும் என்பது. | 11 | 291. | ஒரு சொற்குப் பொருளாக ஒரு சொல் கூறின் அதற்கும் பொருள் வினவின், அவ்வாராய்ச்சி வரம்பின்றி ஒடும் என்பது | 12 | 292. | சொல்லுவான் நன்கு விளக்கினால், சொற்பொருள் திரிபின்றிப் புலனாகும் என்பது | 13 | 293. | சொற்பொருள் உணர்தற்குக் கேட்பான் மாட்டும் அறிவுஉணர்ச்சி இருத்தல் வேண்டும்என்பது | 14 |
|
|
|