315. | இத்துணை என்று வரையறுக்கப்பட்ட பொருள் முடிக்குஞ்சொற்கொண்டு முடியும்வழி உம்மை பெறும்; உலகில் இல்லாப் பொருளும் இடமும் காலமும் படுத்துச் சொல்லுங்கால் உம்மை பெறும்; முன்னது முற்றும்மை, பின்னது எச்சவும்மை என்பது |
21 |
316. | படர்க்கைப் பெயரோடு சுட்டுப்பெயர் தொடர்ந்து வருங்கால், இரண்டும் ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிது வினைகொள்ளுங்கால் சுட்டு முன்னும் வரும்; செய்யுளிடத்து அல்வறையறையே இல்லை என்பதும், ‘சுட்டு முதலாகிய காரணக்கிளவியும்- சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்’ என்பதும |
22 |
317. | திணை- நிலன்- சாதி- குடி- உடைமை- தவம் தொழில்- கல்வி- சினை- குணம்- சிறப்பு இவை பற்றிய பெயரை யொட்டி இயற்பெயர் வருமாயின், திணை முதலிய பற்றிய பெயர் முன்னும் இயற்பெயர் பின்னும் வருதலே சிறப்பு; இந்நிலை இரண்டும் ஒன்றனை ஒன்று கொள்ளாது வினைக்கு ஒருங்கு இயலுங்காலத்தேயாம்; பண்புத் தொகைக்கண் இயற்பெயர் முன்வரினும் அமையும் என்பது |
23 |
318. | ஒரே பொருளைக் குறித்து வரும் பல பெயர்க்குப் பெயர்தோறும் வேறுவேறு தொழில் குறிப்பின், அப்பலபெயரும் அவ்வொருபொருளையே குறிக்காது வேறுவேறு பொருள்களைக் குறிக்கும் பெயர்களாக முடியும் என்பது |
24 |
319. | பலவேறு சிறப்பு வினைகளைத் தழுவி நிற்கும் பொருளைக் குறிக்குஞ்சொல் |