பக்கம் எண் :

42 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 

பொதுச்சொல்லாதல் வேண்டும்; சிறப்பு வினைகளை உடைய பொருள்களைப்
பிரித்து எண்ணுமிடத்தும் முடிக்குஞ்சொல் பொது வினையாதல் வேண்டும்
என்பது

25

320.

வினை, பெயர், இனம், சார்பு இவற்றால் பொருள் தெளிவாக அறியப்படாத பல
பொருள் ஒரு சொற்களைப் பொருள் தெளிவடையுமாறு கிளந்து
அடைகொடுத்தே கூறல் வேண்டும் என்பது

26

321.

ஒரு பொருள் வேறுபாடு குறித்தோன், அஃது ஆற்றல் முதலியவற்றான்
விளங்காதாயின் கிளந்தே கூறல் வேண்டும் என்பது

27

322.

இனமாகிய பல பொருட்கண் ஒன்றனை எடுத்துக் கூறிய வழி, அச்சொல் தன்
இனப் பொருளைச் சுட்டலும் உரித்து; சுட்டாமையும் உரித்து என்பது

28

323.

பலவற்றிற்கும் பொதுவான உயர்திணைப் பொருள்களையும் அஃறிணைப் பொருள்களையும் தலைமை பற்றியோ பன்மை பற்றியோ ஒரு
பொருளைக்கொண்டு பெயரிடல் வேண்டும் என்பது

29

324.

வழக்குப் பற்றி உயர்திணைக்கண்ணும் அஃறி ணைக்கண்ணும் சொற்கள்
பொதுமையிற்பிரிந்து ஆண்மையையும் பெண்மையையும் சுட்டி நிற்கும் என்பது

30

325.

இரட்டைக்கிளவியைப் பிரித்துப் பொருள் கொண்டால் பொருள் சிதையும் ஆதலின், அவை பிரிந்து இசையா என்பது

31