பக்கம் எண் :

நூலமைப்பு43

326.

பெயரிடத்தும் வினையிடத்தும் செய்யுளில் னகர ளகர ரகர யகர மெய்
ஈற்றில்வர, ஈற்றயலாக வரும் ஆகாரம் ஓகாரமாகும் என்பதும், சிறுபான்மை
அகரம் ஓகாரமாகத்திரியும் என்பதும்

32

327.

உருபுகளும் பெயரெச்சமும் வினையெச்சமும் எதிர் மறுத்து மொழியினும்
தத்தம் பொருள் நிலையில் திரியா என வழுவமைத்தல் வேண்டும் என்பது

33

328.

‘உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி’ பொருள் செல் மருங்கு ஒரு
சொல்லான் முடியும்; முற்றும் பெயரெச்சமும் ஒரு வாய்பாட்டான் அடுக்கிப்
பொருள் செல் மருங்கு ஒரு பெயர்ச்சொல்லான் முடியும்; வினையெச்சம் ஒரு
வாய்பாட்டானும் பலவாய்பாட்டானும் அடுக்கிப் பொருள் செல் மருங்கு ஒரு
வினை கொண்டு முடியும்; முடிக்குஞ் சொல் ஒன்றனான் முடியாத வழி இவ்விதி
பொருந்தாது என்பது

34

329.

உருபு, முற்று, பெயரெச்சம், வினையெச்சம் இவற்றிற்கும் இவை கொண்டு
முடியும் சொற்களுக்கும் இடையே பொருள் பொருத்தமுற வரும் பிறசொற்கள்
இடைப்பிறவரல் எனப் பெயர் பெறும் என்பது

35

330.

முடிக்குஞ் சொல்லாய்வரும் பெயர்களும் வினைகளும் முடிக்கப்படும் சொல்லாகி ஒரோ வழி முன்னும் வருதலும் உண்டு என்பது

36

331.

உருபு ஏற்ற சொற்கள் உருபு மறைந்து வருங்கால் அவை இறுதிக்கண் வருவழி
இரண்டாம் வேற்றுமைப் பொருளினும் ஏழாம் வேற்றுமைப் பொருளினுமே
இறுதிக்கண் தொகும் என்பது

37