பக்கம் எண் :

262 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘பற்றோடு வீடே இருபுறம் தான்தெரி தான்தெரியா நற்கருத் தாதீ பகமாம் கருமம்;
நான்கு ஆதாரம்மேல் பொற்புஅமர் சேர்வு கலப்புப் புலனொடு அயல் என்பதாம் கற்பு
மலியும் இருபத்து மூவகைக் காரகமே’ 41

என்ற காரிகைகளையும் நோக்கி யுணர்க.
 

சூறாவளி
 

குழையான் என்றவழிக் கருதுதல் தொழிலும் கருத்தாவும் கருதப்பட்ட குழைபும்
பிறவும் பற்றி அக்கருத்து நிகழ்ந்தது என்றார். அது பொருந்தாமை மேலே கூறினாம்,
வினைக்குறிப்பின்உண்மை அறியாமையின் இவ்வாறு தமக்கு வேண்டியவாறே கூறினார்.
 

அமைதி
 

குழையான்- குழையை உடையன் எனக்கருதுதல் உடையான் என்று பொருள் கோடற்கண் இழுக்கின்மை முன்னர் விளக்கப்பட்டது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்

இ தொல்.சொல்.112,113

  ‘மேதகு நற்றொழில் செய்வான் கருத்தா; வியன் கருவி
தீதில் கரணம்; செயப்பட்ட தாகும் திறல்கருமம்;
யாதலின் நீங்கும் அவதிய தாம்; இடம் ஆதாரமாம்
கோதறு கோளிமன் கொள்பவ னாகும் கொடியிடையே.’

வீ.சோ.38

  ‘செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே.’

நன். 320

 
பெயரியல் விளக்கம்
முற்றும்.