பக்கம் எண் :

334 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘ஆர்களிறு மிதித்த நீர்’ குறுந்.52
 
எள்ளாட்டிய எண்ணெய், உண்ட எச்சில் என்பன போல்வனவும் அன்ன.

நூற்ற நூலான் இயன்ற கலிங்கம்- பூத்தபூவான் இயன்றகண்ணி- என்பனவும்
ஒற்றுமை நயத்தானே, நூற்ற கலிங்கம்-
 

  ‘குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி’ முருகு. 199
எனப் பொருட்பெயர் கொண்டனவேயாம்.
 
    ‘நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ’ பதிற். 12
என்பது பெயர் எச்ச எதிர்மறை. இதுவும் அவ்வியல்பிற்று.

உம்மையை எச்ச உம்மை ஆக்கிச்செய்வது ஆதி ஆறு பொருட்பெயருமே அன்றி,
அரசன் ஆகொடுத்த பார்ப்பான்- கொடுக்கின்ற பார்ப்பான்- கொடுக்கும் பார்ப்பான்-
எனவும் ஆடை ஒலித்தகூலி- ஒலிக்கின்ற கூலி ஒலிக்கும் கூலி எனவும் ஒத்த உரிமையன
அன்றிச் சிறுபான்மை இன்னதற்காக- இது பயனாக- என்பன பற்றி வரும் பெயரும்
கொள்க. இன்னும் பழம் உதிர்ந்தகோடு- உதிர்கின்ற கோடு உதிருங்கோடு எனச்
சிறுபான்மை தீர்தல் பொருண்மை பற்றிவரும் பெயரும் கொள்க.

இனிச் செய்த என்பதன் குறிப்பாய், இன்ன-அன்ன என்ன- கரிய- செய்ய- பெரிய
என வருவனவும் காண்க.
 

  ‘இன்ன தன்மையின் அருமையின்’ சீவக. 2754

எனவும்

  ‘அன்னதன்மையின் அறிந்துஈயார்’ புறம். 136

எனவும்,

  ‘என்ன கிளவியும் பண்பின்தொகையே’ தொல்.சொல்.416

எனவும்,