பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-17335

  ‘கரியமலர் நெடுங்கண்’ சிலப். கானல்வரி  
எனவும்,
  ‘செய்ய கோலினாய்’ சூளா. சீய. 26
எனவும்,
    ‘பெரிய கேழல் அட்டபேழ்வாய் ஏற்றை’ அகம்.8
எனவும் பிறாண்டும் வந்தவாறு காண்க. 17
 

விளக்கம்:
 

எய்தியது- சென்ற நூற்பாச் செய்தி.
                    சிறப்புவிதி- வகையும், முடிக்குஞ்சொல் பாகுபாடும்.

தொழில்முதல்நிலை எட்டு- வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம்,
கருவி, இன்னதற்கு, இது பயன் என்பன. (இ.வி.226)

ஆடிய கூத்தன், ஆடுகின்ற கூத்தன், ஓதும்பார்ப்பான் - செய்வது.

வென்றவேல், வெல்கின்றவேல், வனையுங்கோல்கருவி, புக்கஇல், புகுகின்ற இல்,
வாழும்இல்- நிலன்.
                    போயினபோக்கு, போகின்றபோக்கு, உண்ணும் ஊண்- வினை.
                    வந்தநாள், வருகின்றநாள், துயிலுங்காலம்- காலம்.
                    உண்டசோறு, உண்கின்றசோறு, கற்கும்நூல்- செயப்படுபொருள்.
                    தொல்காப்பியனாரின் முறை நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற்கிளவியும் வினையும் என்பன; நன்னூலார் முறை செய்பவன்- கருவி- நிலம்-
செயல்-காலம்- செய்பொருள்- என்பன. இவர் தொல்காப்பியனாரை ஒட்டிப்பெயரியலில்
நூற்பாயாத்து, ஈண்டு நன்னூலாரை ஒட்டி எடுத்துக்காட்டுக்களை .