முறையாகத் தந்துள்ளார். எதிர்காலம் வாய்பாடு பற்றி எடுத்துக்காட்டுக்களைச் சற்று மாற்றித் தந்துள்ளதன்கண் சிறப்பு ஏதும் இன்று. புகுகின்ற இது முதலியவற்றைப் புகாநின்றஇல் முதலியனவாகவும், ஓதும் பார்ப்பான் முதலியவற்றை ஓதா நிற்கும் பார்ப்பான் முதலியனவாகவும், வாய்பாடு யேறுபடுத்து இவ் விகற்பங்களை ஒட்டிக்கொள்க. கருவி- நிலம்- செயல்- காலம்- செயப்படுபொருள்- இவை முடிக்குஞ்சொல் ஆகியவழி, எழுவாய் அவன்வென்ற வேல் என்றாற்போலப் பெயரெச்சத்தின் முன்னர் வருதல் வேண்டும். பெயரெச்சம் எழுவாயைக் கொண்டு முடியும்வழி ஆடிய கூத்தன் என்றாற்போல அப்பெயர் பின்னேயே வரும் என்பது.நோய் தீரும் மருந்து- தீரும் என்பது மருந்து என்ற கருவிப்பெயர் கொண்டு முடிந்தது; என்னை? நோய்தீருவதற்கு ஏதுவாகிய மருந்து கருவிக்கண் அடங்குதலின் என்க. சிறந்தஇவன்- சிறந்த என்ற பெயரெச்சம் இவள் என்ற கருவிப்பெயர் கொண்டது. என்னை? அவன் சிறத்தற்கு ஏதுவாகிய இவள் கருவிக்கண் அடங்குதலின் என்க. (தேரோடும் புறங்காணேன் ஆயின் என்’ என்று பாடத்திலுள்ளது) நிலம் பூத்தமரம்- பூத்த என்பது மரம் என்னும் கருவிப் பெயர் கொண்டது. என்னை? நிலம் பொலிவு பெறுதற்குக் காரணமாகிய மரம் கருவிக்கண் அடங்குதலின் என்க. காணும் மருந்து - காணும் காட்சியாகிய மருந்து என்று பொருள்படுதலின் காணும் என்பது வினையைக் கொண்டு முடிந்ததாகக் கொள்ளப்படும். வினை- செயல். இது சேனாவரையர் கருத்து. (தொல்.சொல். 234) |