பக்கம் எண் :

442 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே’

தொல்.சொல். 283


என்பதனை உட்கொண்டு எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் மயங்கா என்பது கூறப்பட்டது.
 
  ‘உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார்’

தொல்.சொல். 291


என்பதன் சேனாவரையர் உரையை உட்கொண்டு,

 

  ‘பாட்டும் கோட்டியும்’ ‘இசையினும் குறிப்பினும்’

 


என்ற எடுத்துக்காட்டுக்கள் தரப்பெற்றுள்ளன.

தொல்காப்பியச் செய்திகள் பெரும்பாலும் நூற்பாவானும் உரையானும் குறிப்பிடப்பட்டவாறு அறிக.
 

 மூன்றாவது - இடைச்சொல்லியல்
 

உரை விளக்கம் முற்றும்.