வரலாறு: கறுப்ப சிவப்பு- என்பன போல்வன பெயர்ப்போலி. உறு- தவ- என்பன போல்வன வினைப்போலி, துவைத்தல்- சிலைத்தல்- என்பன போல்வன பெயர்க்கு முதல்நிலை ஆயின. துவைக்கும்- சிலைக்கும்- என்பன போல்வன வினைக்கு முதல்நிலை ஆயின. உறுபுகழ்- நனிபேதை- என்பன போல்வன பெயர்முன் நின்றன. நனி சொற்றான்- தவச்சென்றான்- என்பன போல்வன வினைமுன் நின்றன. |
| ‘திரிகாய் விடத்தரொடு காருடைபோகி’ | பதிற்.13 |
| ‘கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்’ | நெடுநல்.18 |
என்பன போல்வன பெயர்ப்பின் நின்றன. |
| ‘மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்’ | அகம்.22 |
| வெயில்புறம் தரூஉம் இன்னல் இயக்கத்து’ | மலைபடு.374 |
என்பன போல்வன வினைப்பின் நின்றன.உறு- தவ- என்பன போல்வன பலசொல் ஒருபொருட்கு உரிய ஆயின. கடி- நளி- என்பன போல்வன ஒருசொல் பலபொருட்கு உரிய ஆயின. பிறவும் அன்ன. பொருட்கு உரியவாகிய குறிப்பு முதலியவற்றை உணர்த்தி நிற்றலின் உரிச்சொல் ஆயிற்று. இவ்வாறு அன்றிப் பெரும்பாலும் செய்யுட்கு உரித்தாய் வருதலின் உரிச்சொல் ஆயிற்று என்பாரும் உளர். 1 |
விளக்கம் |
| நிறுத்தமுறை- ‘அதுவே இயற்சொல் திரிசொல்’ | (171) |
என்ற நூற்பாவில் நிறுத்தமுறை.குறிப்பு இசை பண்பு என்பனவற்றிற்கு உரிமையுடையவாய்ப் பெரும்பாலும் செய்யுட்கே உரிய ஆதலின் உரிச்சொல் ஆயின. |