| ‘மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்’ | அகம். 22 | எனவும், | | ‘வெயில்புறம் தரூஉம் இன்னல் இயக்கத்து’ | மலைபடு. 374 | எனவும், செல்லலும் இன்னலும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் இன்னாமை என்னும் உரிச்சொல் உணர்த்தும் குறிப்புப் பொருள் உணர்த்தலும், | | ‘அலமரல் ஆயம்’ | குங்குறு.64 | எனவும், | | ‘தெருமரல் உள்ளமொடு அன்னை துஞ்சாள்’ | | எனவும் அலமரலும் தெருமரலும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் மனத்தடுமாற்றம் ஆகிய சுழற்சி என்னும் உரிச்சொல் உணர்த்தும்குறிப்பு உணர்த்தலும், | | ‘வரைபுரை மழகளிறு’ | புறம்.38 | எனவும், | | ‘குழக்கன்று’ | நாலடி-101 | எனவும், மழவும் குழவும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் இளமை என்னும் உரிச்சொல் உணர்த்தும் குறிப்பு உணர்த்தற்குப் பொருந்துதலும், | | ‘இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துனிகூர் எவ்வமொடு’ | சிறுபாண்.38, 39 | எனவும், | | ‘சினனே காமம் கழிகண்ணோட்டம்’ | பதிற்.22 | எனவும் கூர்ப்பும் கழிவும் ஆகிய இரண்டும் முன் சிறவாது உள்ளது ஒன்று சிறத்தல் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
|
|
|