| ‘கதழ்பரி நெடுந்தேர்’ | | எனவும், | | ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்’ | அகம்.9 | எனவும், கதழ்வும் துனைவும் ஆகிய இரண்டும் விரைவு என்னும் குறிப்பு உணர்த்தலும், | | ‘அதிர வருவதோர் நோய்’ | குறள்.429 | எனவும், | | ‘விதுப்புறல் அறியா ஏமக்காப்பினை’ | புறம்.20 | எனவும் அதிர்வும் விதுப்பும் ஆகிய இரண்டும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தலும், | | ‘கெடவரல் ஆயமொடு’ | | எனவும், | | ‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்’ | தொல்.சொல்.249 | எனவும், கெடவரலும் பண்ணையும் விளையாட்டுக்கருத்தாகிய குறிப்பு உணர்த்தலும், | | ‘நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி’ | அகம்.198 | எனவும், | | ‘பேரிசை நவிரம் மேஎய் உறையும் காரி உண்டிக் கடவுள்’ | மலைபடு.82, 83 | எனவும், நம்பும் மேவும் ஆகிய இரண்டும் நசை என்னும் குறிப்பினை உடைய ஆதலும் | | ‘வேனில் உழந்த வறிதுஉயங்கு ஓய்களிறு’ | கலி.7 | எனவும், | | ‘பாய்ந்து ஆய்ந்த தானை’ | கலி.96-2 | எனவும், | | ‘நிழத்த யானை மேய்புலம் படர’ | மதுரைக். 303 | எனவும், | | ‘கயல் அறல் எதிரக் கடும்புனல் சாஅய்’ | நெடுநல். 18 |
|
|
|