பக்கம் எண் :

452 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எனவும், ஓய்தலும் ஆய்தலும் நிழத்தலும் சாய்தலும் ஆகிய நான்கு உரிச்சொற்களும் முன் நுணுகாது உள்ளதுஒன்று நுணுகுதல் குறிப்பினை அறிய உணர்த்தலும்,
 
  ‘அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும்’
 
எனவும்,
 
  ‘அமரர்ப் பேணியும் ஆகுதி அருத்தியும்’ புறம்.99
எனவும்,

பிணையும் பேணும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் பெட்பின் பொருளாகிய புறந்தருதல் என்னும் குறிப்பினை உடைய ஆதலும்,
 

  ‘பையுள் மாலைப் பழுமரம் படரிய’ நச்.உரை.மேற்.
எனவும்,
 
  ‘சிறுமை உறுபவோ செய்யுஅறி யலரே’ நற்.1
எனவும் பையுளும் சிறுமையும் ஆகிய இரண்டும் நோய் என்னும் குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ புறம்.53
எனவும்,
 
  ‘உறந்த இஞ்சி உயர்நிலை மாடத்து’
 
எனவும், வெறுப்பும் உறப்பும் ஆகிய இரண்டும் செறிவு என்னும் குறிப்பினை
உணர்த்தலும்,
 
  ‘இலம்படு நாணுத்தரும்’ சிலப்.9-71
எனவும்,
 
  ‘ஒக்கல் ஒற்கம் சொலிய’ புறம்.327
எனவும் இலம்பாடும் ஒற்கமும் ஆகிய இரண்டும் வறுமை என்னும் குறிப்பினை
உணர்த்தலும்,