| ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ | நெடுநல்-90 |
எனவும், |
| ‘புண்உமிழ் குருதி முகம்பாய்ந்து இழிதர’ | குறிஞ்சி.72 |
எனவும் ஞெமிர்தலும் பாய்தலும் ஆகிய இரண்டும் பரத்தலாகிய குறிப்பினை உணர்த்தலும், |
| ‘மன்ற மராஅத்த பேம்முதிர் கடவுள்’ | குறுந்.87 |
எனவும், |
| ‘நாம நல்லரா கதிர்பட உமிழ்ந்த’ | அகம்-72 |
எனவும், |
| ‘உருமில் சுற்றமொடு’ | பெரும்பாண். 447 |
எனவும் பேமும் நாமும் உருமும் என்று சொல்ல வருகின்ற கிளவியாகிய அம்முறைமையினையுடைய மூன்று உரிச்சொற்களும் அச்சம் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘நிற்கறுப்பதோர் அருங்கடி முனையள்’ | |
எனவும், |
| ‘நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்’ | பதிற்.13 |
எனவும், கறுப்பும் சிவப்பும் ஆகிய இரண்டும் வெகுளியாகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘கல்லே பரவின் அல்லது நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ | புறம்.335 |
எனவும், |
| ‘செறிவளை விறலியர் கைதொழூஉப் பழிச்சி வறிதுநெறி ஒரீஇ’ | |
எனவும், பரவும்பழிச்சும் ஆகிய இரண்டும் வழுத்துதல் ஆகிய உரிச்சொல்லின் குறிப்பு உணர்த்தலும் வரலாற்று முறைமை என்று கூறுவர் உரிச் சொற்கள் பொருள் உணர்த்தும் தன்மையை அறிந்தோர் என்றவாறு. |