பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-2455

  ‘பிணையும் பேணும் பெட்பின் பொருள.’ 338,41
  ‘பையுளும் சிறுமையும் நோயின் பொருள’. 341
  ‘விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.’ 347
  ‘இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை’. 360
  ‘ஞெமிர்த்தலும் பாய்தலும் பரத்தற் பொருள’.
‘பேம்நாம் உருமென வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.’
365
  ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.’ 372,44
  ‘பரவலும் பழிச்சும் வழுத்தின் பொருள.’ 382,45
  ‘நம்பும் மேவும் நசையாகும்’. நே.சொல்.57
  ‘விரைவாம் கதழ்வும் துனைவும்.’ 60
  ‘சால உறுதவ நனிகூர் கழிமிகல்’. நன்.456


தாம் ஒன்றாய் நின்று பலபொருள் உணர்த்துவன:
 

282 ஏற்றம் நினைவும் துணிவும் இயம்பலும்
விறப்பே செறிவும் வெருவலும் விளக்கலும்
பணையே பிழைத்தலும் பெருத்தலும் இசைத்தலும்
தாவே வலியும் வருத்தமும் தழுவலும்
செழுமை வளனும் கொழுப்பும் செப்பலும்
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்
நனவே களனும் அகலமும் செய்தலும்
மதவே மடனும் வலியும் அன்றி
மிகுதியும் வனப்பும் ஒருவழி விளக்கலும்
கடிஎன் கிளவி வரைவே கூர்மை
காப்பே புதுமை விரையே விளக்கம்
மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்றொடு
ஐயமும் கரிப்பும் மணமும் அறைதலும்
முறைஎன மொழிப முறைஉணர்ந் தோரே