இது குறிப்பு உணர்த்துவனவற்றுள், தாம் ஒன்றாய் நின்று பல பொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்கின்றது. |
| இ-ள்: ‘கானலஞ் சிலம்பன் கொடுமை ஏற்றி’ | குறுந்.145 |
எனவும், |
| ‘ஏற்றமில் லாட்டிஎன் ஏமுற்றாள்’ | கலி.144 |
எனவும் ஏற்றம் என்னும் உரிச்சொல் நினைவும் துணிவும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘விறந்த காப்பொடு உள்நின்று வலியுறுத்து’ | |
எனவும், |
| ‘அவல்எறி உலக்கைப் பாடுவிறந்து’ | பெரும்பாண்.226 |
எனவும் விறப்பு என்னும் உரிச்சொல் செறிவும் வெருவலும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘அமர்க்கண் ஆமான் அருநிறம் மூழ்காது பணைத்துவீழ் பகழிப் போக்குநினைந்து கானவன்’ | நற்.165 |
எனவும், |
| ‘வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டு’ | அகம்.1 |
எனவும், பணை என்னும் உரிச்சொல் பிழைத்தலும் பெருத்தலும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ | புறம்.47 |
எனவும், |
| ‘கறவை கன்றுவயின் படர’ | குறுந்.108 |
எனவும், படர் என்னும் உரிச்சொல் உள்ளுதலும் செலவும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘தாவில் நன்பொன் தைஇய பாவை’ | அகம்.212 |
எனவும், |