| ‘கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றென’ | குறுந்.69 |
எனவும் தாஎன்னும் உரிச்சொல் வலியும் வருத்தமும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘செழுஞ்செய் நெல்லின்’ | |
எனவும், |
| ‘செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’ | |
எனவும், செழுமை என்னும் உரிச்சொல் வளனும் கொழுப்பும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு’ | நாலடி.159 |
எனவும், |
| ‘வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை எண்ணுங் காலை’ | புறம்.27 |
எனவும், |
| ‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ | அகம்.170 |
எனவும், விழுமம் என்னும் உரிச்சொல் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |
| ‘நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்’ | அகம்.82 |
எனவும், |
| ‘நனந்தலை உலகம் வளைஇ’ | முல்லைப்.1 |
எனவும், நனவு என்னும் உரிச்சொல் களனும் அகலமும் ஆகிய குறிப்பு உணர்த்தலும், |