பக்கம் எண் :

474 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘துணையில் தீர்ந்த கடுங்கண் யானை’
 
எனத் தீர்தல்- விடலும்,
 
  ‘பழுதுகழி வாழ்நாள்’
 
எனப் பழுது- பயமின்மையும்,
 
  ‘மண்முழுது ஆண்டநின் முன்னோர்போல’
 
என முழுது எஞ்சாமையும்,
 
  ‘வம்ப மாரியைக் கார்என மதித்தே’ குறுந்.66
என-வம்பு- நிலையின்மையும்,
 
  ‘மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய்’ கலி.56
என மாதர்-காதலும்,
 
  ‘புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி’ அகம்.7
எனப் புலம்பு- தனிமையும்,
 
  ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்’ பதிற்.11
எனத் துவன்றல்- நிறைவும்,
 
  ‘கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து’ மலைபடு.268
என முரஞ்சல்- முதிர்வும்,
 
  ‘பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்’ நற்.34
எனப் பொற்பு- பொலிவும்,
 
  ‘வறிதுவடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி’ பதிற்.24
என வறிது- சிறிதும்,
 
  ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’குறிஞ்சி.8
என எய்யாமை- அறியாமையும்,
 
  ‘நன்றும் அரிதுற் றனையால் பெரும’ அகம்.10
என நன்று- பெரிதும்,
 
  ‘நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்’ மதுரைக்.89
எனத் தெவு- கொள்ளுதலும்,