பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-11475

  ‘தெவ்வுப்புலம் சிதைய எய்கணை சிதறி’
 
எனத் தெவ்வு பகையும்,
 
  ‘கழுமிய ஞாட்பினுள் மைந்துஇழந்தார் இட்ட’ களவழி.11
எனவும்,
 
  ‘கழும முடித்துக் கண்கூடு கூழை’ கலி.56
எனவும் முறையே கழுமம்- மயக்கமும் திரட்சியும்,
 
  ‘கருவிவானம் கதழ்உறை சிதறி’ அகம்.4
எனக் கருவி- பலவற்றது கூட்டமும்,
 
  ‘கார்கோள் முகந்த கமம்சூல் மாமழை’ முருகு.7
எனக் காமம்- நிறைவும்,
 
  ‘அரிமயிர்த் திரள்முன்கை’ புறம்.11
என அரி- ஐம்மையும்,
 
  ‘கவவுக்கடுங் குரையள் காமர் வனப்பினள்’ குறுந்.132
எனக் கவவு அகத்திடுதலும்,
 
  ‘கவர்நடைப் புரவி’ அகம்.130
எனவும்,
  ‘கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்’ அகம்.3
எனவும் கவர்வு- விருப்பும் கைக்கொள்ளுதலும்,
 
  ‘சேர்ந்துசெறி குரங்கின்’ 170
எனச் சேர்-திரட்சியும்,
 
  ‘இருங்கல், வியலறைக் கிடத்தி வயிறுதின்று’
 
என வியல்- அகலமும்,
 
  ‘துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்’ புறம்.44
என வய-வலியும்,