பக்கம் எண் :

476 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘துயவுற்றேம் யாமாக’
 
எனத் துயவு- அறிவின் திரிவும்
 
  ‘பருந்திருந்து உயாவிளி பயிற்றும்’ அகம்.19
என உயா வருத்தமும்,
 
  ‘உசாத்துணை’ ந.அ.சூ.110
என உசா- சூழ்ச்சியும்,
 
  ‘வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்’ நாலடி.201
என வயா- கருப்பம் தங்கி வருத்தமுற்று நுகரப்படும் பொருள்மேல் செல்லும் வேட்கையினது பெருக்கமும்,
 
  ‘புனிற்றா பாய்ந்தெனக் கலங்கி’ அகம்.56
எனப் புனிறு-ஈன்று அணிமையும்,
 
  ‘வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர’
நற்.210
எனயாணர்- வாரி புதிதாகப் படுதலும்,
 
  ‘அகன் அமர்ந்து செய்யாள் உறையும்’ குறள்.84
என அமர்தல்-மேவலும்,
 
  ‘யாணது பசலைஎன் றனனே’ நற்.50
என யாண்- கவினும்,
 
  ‘ஐதே காமம் யானே’ குறுந்.21தீ
என ஐ- வியப்பும்,
 
  ‘சேற்று நிலம் முனைஇய செங்கண் காரான் அகம்.46
என முனைவு-முனிவும்,
 
  ‘வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவிசாய்த்து’ முல்லைப்.73
என வை- கூர்மையும்,
 
  ‘சிலைநவில் எறுழ்த்தோள் ஓச்சி’
 
என எறுழ்- வலியும்,