இருமை- கருமையும் பெருமையும் ஆகிய குறிப்புப் பொருண்மை உணர்த்தி நின்ற உரிச்சொற்கள். |
| மையில் வாண்முகம் பசப்புஊ ரும்மே’ | கலி.7 |
எனப் பசப்பு-நிறனும், |
| ‘மயில்சாயல் மகள்வேண்டி’ | பு.வெ.மா.உழி.21 |
எனச் சாயல்- மென்மையும் |
| ‘எம்வெம் காமம் இயைவது ஆயின்’ | அகம்.15 |
எனவெம்மை- விரும்புதலும், |
| கண்ணே, நோக்கி நோக்கி வாள்இழந் தனவே’ | குறுந்.44 |
எனவாள்- ஒளியும் ஆகிய பண்புப் பொருண்மை உணர்த்தி நின்ற உரிச்சொற்கள். |
| ‘வாயில் தோன்றி யாழ்இசையூப் புக்கு’ | |
என இசை-இசைப் பொருண்மை உணர்த்தி நின்ற உரிச்சொல். |
| ‘வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன’ | தொல்.சொல்.289 |
என்ப ஆதலின், வெளிப்பட்ட உரிச்சொற்களைக் கிளந்ததனால் பயன் இன்மையின் அவற்றை ஒழித்து, வெளிப்படாதனவற்றுள் இவை போல்வன பிற வருவன உளவேல் அவற்றையும் இப் புறனடையானே எடுத்தோதி ஈண்டே அமைத்துக் கொள்க. 11 |
விளக்கம் |
ஏனைய பெயர் வினைகள் போல உரிச்சொற்களைத் திணை பால் இடம் விகுதி முதலிய கொண்டு வரையறுத்தல் இயலாததாகவே, வெளிப்பட வாராத சொற்களைப் பழக்கத்தில் உள்ள சொற்களைக்கொண்டு விளக்கினாலும் எல்லாவற்றையும் |