பக்கம் எண் :

478 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

சோராமல் விளக்குதல் இயலாது; ஆகவே, கூறியவற்றைக்கொண்டு கூறாதவற்றையும் வழக்கும் செய்யுளும் நோக்கி உணர்க என உரிச்சொல் பற்றிய புறனடை கூறியவாறு.

குறை- இன்றியமையாமை. பொருளைச்சொல் இன்றியமையாமையின் அதனைக்
‘குறை’ என்றார்.

இந்நூற்பா தொல்காப்பியச் சொற்படல 396 ஆம் நூற்பாவாகும். இதன் உரையில்
தாம் முன்பு காட்டாத தொல்காப்பிய உரிச்சொற்களை எஞ்சாமல் அடக்கியுள்ளார்.
அவற்றொடு ‘படரே உள்ளல் செலவும் ஆகும்’ (தொல். சொல்.373) என்பதனையும்,
‘கறுப்பும் சிவப்பும்- நிறத்துஉரு உணர்த்தற்கும் உரிய என்ப’ (தொல்.சொல்.373)
என்பதனையும் கொள்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘உரூஉட்காகும்’ தொல்.சொல். 300 மு.வீ.ஒ.28
  ‘புரைஉயர்பாகும்’ 300 28
  ‘மல்லல் வளனே.’ 303 30
  ‘ஏபெற்றாகும்.’ 304 30
  ‘உகப்பே உயர்தல்.’ 305 31
  ‘உவப்பே உவகை.’ 305 31
  ‘பயப்பே பயனாம்.’ 306 32
  ‘பசப்பு நிறனாகும்.’ 307 32
  ‘இயைபே புணர்ச்சி.’ 308 33
  ‘சீர்த்தி மிகுபுகழ்.’ 312 36
  ‘மாலை இயல்பு.’ 313 36
  ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்.’
பொருட்டாகும்.’
318 39
  ‘பழுது பயமின்றே.’ 324
 
  ‘முழுதுஎன் கிளவி எச்சாப் பொருட்டே’ 326