பக்கம் எண் :

42 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

முதலிய சொல்லிசையளபெடைகள் தூவி, உடுத்து, குழுமி என்ற சொற்களாகிய செய்து
என்னும் எச்சத் திரிபாகலின், இவற்றை முறையே (தூவு+இன்+உ) (உடுத்து+ இன்+உ)
(குழுமு+இன்+உ) முதலிய பகுதி, இடைநிலை, வினையெச்ச விகுதிகளாகப் பிரித்து
விகுதியும் இடைநிலையின் னகரமும் கெட்டு முடிந்தனவாகக் கொள்க.

‘வம்மின்’ என்பதை வா+மின் எனப் பகுத்திடுக.

‘செய்’ என்பது செய்யாய், என்பதன்கண் ஆய் ஈறு கெட ஏற்பட்ட
ஏவல்வினையெனக் கொள்க. பகுதியே ஏவல் வினையாகும் என்பர் சிலர்.

வாரானை, தோற்றரவு, செய்யுள், கோட்பாடு, பண்பாடு முதலிய
தொழிற்பெயர்களை ஆனை, அரவு. உள், பாடு, ஆடு என்பன விகுதிகளாய்க்கொண்டு
பகுத்திடுக.
 

  ‘வைத்தான்’ என்பதில் வை- பகுதி; த்- சந்தி; த்-இடை நிலை;
                     ஆன்- விகுதி.
‘அறிகலார்’ அறி+க்+அல்+ஆர்
                     க்-சந்தி; அல்-எதிர்மறை இடைநிலை
‘பார்ப்பார்’ பார்+ப்+ப்+ஆர்
                     ப்-சந்தி; ப்-இடைநிலை; ஆர் விகுதி.
 
பெரும்பாலும் இடைநிலை எந்த எழுத்தோ அந்த எழுத்தே சந்தியாக இருக்கும்.
 
  நடந்தான்:- நட+த்+த்+ஆன்
                     த்-சந்தி; த்-இடைநிலை;
                     சந்தி ‘த்’ ந் ஆனது விகாரம்.
வருவான்:- வா+வ்+ஆன்
                     வா-வரு என்றானது விகாரம்.