பக்கம் எண் :

பகுபத-உறுப்பிலக்கணம்43

 

உண்டனன்:- உண்+ட்+அன்+அன்
                     அன்- சாரியை; அன் விகுதி.
உண்குவன்:- உண்+கு+வ்+அன்
                     கு- சாரியை.
 
வந்த-முதலிய சொற்கள், வினை முற்றாகவும் பெயரெச்சமாகவும் வரும். இருவழியும் ‘அ’
என்பதே விகுதி.

‘வாழிய’ முதலிய சொற்கள் வியங்கோள் வினைமுற்றாயின் யகரம் விகுதி. ‘இ’-
சாரியை;

வினை யெச்சமாயின் ‘இய’ என்பது விகுதி.
                     வண்ணாத்தி:- வண்ணாரம்+இ எனப் பிரியும்.

வாரா, தாரா:- ஆ-விகுதி. அதுவே எதிர்மறை காட்டும். ர்- எழுத்துப்பேறு.

இல்லாத- ஆகாரச்சாரியையோடு சேர்த்து இல்லா பகுதி; த் எழுத்துப்பேறு;
அகரம் விகுதி என்க.
 

சில சொற்கட்கு உறுப்பிலக்கணம்.
 

     உண்ணிய; தருபாக்கு (பொழுது) கழிப்பி; வழீஇ தூஉய்; தோற்றரவு:
                     வாராமை; செய்யுள்; வாழ்ச்சி; செய்தி.
                     இவற்றுள்,
 

  உண்ணிய- உண்+ண்+இய
                     உண்-பகுதி; இய- வினையெச்ச விகுதி
                     ண்- சந்தி.
தருபாக்கு- தா+பாக்கு
                     தா- பகுதி; பாக்கு- வினையெச்ச விகுதி;
                     தா- தரு ஆனது விகாரம்.