சுவாமிநாதம்127சொல்லதிகாரம்
 

விளக்கம் : அம்ம:

     1. ஏவல்-அம்ம வாழி தோழி (நற். 158.1) - தோழீ! வாழி! யான்
கூறுகின்ற இதனைக் கேட்பாயாக என்ற பொருள் தருவதால் ஏவல் பொருள்.

     2. அசைநிலை: ‘பயனின்று மன்று அம்ம காமம்’ (கலி.142.3)

ஒடு: இசைநிறை-‘விதைக்குறு வட்டி போதொடு பொதுள, (குறுந். 155.1)

தெய்ய: உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்’ (குறுந். 81.4)

அந்தில்: 1. அசைநிலை: ‘அந்திற், கழலினன், கச்சி னன்’ (அகம். 76.6)

        2. இடப்பொருள்: ‘வருமே சேயிழை அந்திற் கொழுநற் காணிய’
          (குறுந். 293.7) தலைவி - கணவனைக்காண அந்த இடத்துக்கு
          வரும்.

ஆங்கு : ஆங்குத் திறனல்ல யாழ்கழற - அசைநிலை.

மாள   : சிறிது தவிர்ந்து ஈக மாளநின் பரிசிலர் உய்ம்மார்.

மியா   : செழுந்தழையன் சென்மியா சென்று.

மதி     : சென்மதி பெரும. (அகம் 46. 16)

இக     : கண்பனி ஆன்றிக வென்றி தோழி.

மோ    : கண்டது மொழிமோ. (குறுந். 2.2)

அத்தை : செலியர் அத்தை நின் வெகுளி. (புறம். 6)

இத்தை  : நீ ஒன்று பாடித்தை. (கலி 40. 10)

யாழ    : நீயே செய்வினை மருங்கிற் செலவு அயர்ந்தியாழ. (கலி.7)

வாழிய  : காணிய வாழி மலைச்சாரல்.

ஈ      : சென்றீ பெரும.