3. காலம் : நம்பி வாழ்நாள் பெரியன் 4. சினை : நம்பி மூக்குக் கூரியன் 5. குணம் : நம்பி குடிமை நல்லன் 6. தொழில் : நம்பி நடை கடியன் திணைபால் வழுவி வருதல்: 1. இழிவு : ‘ஏவவும் செய்யலான், தான் தேறான் அவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்’ (குறள் 848) இங்கு ‘தான் தேறான்’ என்ற உயர்திணை இழிவு காரணமாக ‘அவ்வுயிர்’ என்ற அஃறிணையோடு மயங்கியது. 2. சொல்நோக்கு : அரசு வந்தது. இங்கு அரசு என்பது அரசன் என்று பொருள்பட்டு உயர்திணையைக் குறித்தாலும் சொல் நிலையில் அஃறிணையாக இருப்பதால் அஃறிணை முடிபை ஏற்றுள்ளது. எனவே இங்கு உயர்திணையும் அஃறிணையும் மயங்கியது. 3. கோபம் : அவன் தந்தை வந்தது. சொல்லுவோனின் கோபத்தினால் தந்தை என்ற உயர்திணைச் சொல் அஃறிணை முடிவு பெற்று மயங்கியது. 4. உயர்பு (மேன்மை) : ஒருவர் வந்தார். இங்கு உயர்வினால் ஒருமையும் (எழுவாய்) பன்மையும் (பயனிலை) மயங்கியது. 5. உவகை (மகிழ்ச்சி) : தன் புதல்வனை என் அம்மை வந்தாள் என்பது மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாயிற்று. 6. சிறப்பு : கண்போலச் சிறந்தவனை, ‘என் கண் வந்தது’ என்பது சிறப்பினால் உயர்திணை அஃறிணையாய் மயங்கியது. |