சுவாமிநாதம்143சொல்லதிகாரம்
நிலப்பெயரும் இயற்பெயரும்
 
: குன்றவன் பாரி
பண்புப்பெயரும் இயற்பெயரும்
 
: அருளாளன் கண்ணன்
உடைமைப்பெயரும் ’’
 
: நிலக்கிழான் பாரி
தவப் பெயரும்
 
: முனிவன் அகத்தியன்
தொழிற் பெயரும்
 
: ஆசிரியன் தொல்காப்பியன்

இவ்வாறே ஏனைய பெயரோடும் கூறலாம்.

இது இலக்கண விளக்கம் 314, 315, 317 ஆகிய சூத்திரங்களை
அடியொற்றியது.

63. பொருள் தோன்றிற் பலபெயர்க்கோர் வினைமுடித்தல் கடனாம்
     பொதுவினைச் சொல்லால், வேறுஎண் பலவினைச்சொன்
 

முடிப்பார்;

 
  மருவிடம், பேர், இனம், சார்புவினையாற், பல பொருட்கே
     வரும் ஒருசொல் இனையதென்பார்; தலைமை, பன்மை
 

சிறப்பால்

 
  இரு திணையிற் பலபொருளை ஒருபெயரால் உரைப்பார்;
     இனம்உள பண்பாம் வழக்கில் இலதாம் செய்யுளுக்கே.
ஒரு பெயரால், வினையால், ஆண்பெண்ணை உணர்த்து
 

இசைப்பார்;

 
       உண்டுஎடுத்த வினம் பேசலும் பேசாமையுமே. (10)

சில மரபுகளை விளக்குகின்றது.

உரை : ஒரு பொருளைக் குறித்து வரும் பல பெயர்ச் சொற்களுக்கு
ஒரு வினைச்சொல்லையே பயனிலையாகக் கொடுக்க வேண்டும்.

வேறு வேறு வினைகளை ஏற்கக்கூடிய ஒரு பொருட் தொகுதியைச்
சேர்ந்த பல பெயர்ச் சொற்களுக்குப் பொதுவான சொல்லாலும், அந்தச்சிறப்பு
சொற்களாக எண்ணி நிற்கும் பலசொற்களையும் அந்த பொருட்தொகுதிக்குரிய
பொது வினையாலும் கூறவேண்டும்.