சுவாமிநாதம்153சொல்லதிகாரம்
 

     மூன்றாம் வேற்றுமையும் முதல் வேற்றுமையும் ஒன்றாகும் என்றது
இரண்டும் கருத்தாப் பொருளில் வரும் என்பதாகும். இராமன் இராவணனைக்
கொன்றான். இதில் இராமன் கருத்தா; அது முதல் வேற்றுமையாக வந்துள்ளது.

     இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்-இதில் இராமன் மூன்றாம்
வேற்றுமைக் கருத்தாப் பொருளில் வந்துள்ளது.

     முன் மொழியில் பொருள் சிறந்து நிற்றல் : வேங்கைப் பூ
     பின் மொழியில்         ’’           : நீர்க்குவளை
     இரு மொழியில்         ’’           : இராப்பகல்
     அன் மொழியில்        ’’           : பொற்றொடி -
               (இது பெண்ணைக்குறிக்கும்போது மட்டுமே)

     தொகாநிலை

முற்று        : உண்டான் சாத்தன்
பெயரெச்சம்   : படித்த மாணாக்கன்
வினையெச்சம் : உழைத்து உயர்ந்தான்

பெயரும் உருபும் ஏற்றசொல்:

முதல் வேற்றுமை : உழைப்பு வென்றது
2ஆம்    ’’     : குறளைக் கற்றான்
3ஆம்    ’’     : கையால் எழுதினான்
4ஆம்    ’’     : நண்பனுக்குக் கொடுத்தான்
5ஆம்    ’’     : ஊரிலிருந்து வந்தான்
6ஆம்    ’’     : வள்ளுவருடைய நூல்
7ஆம்    ’’     : பல்கலைக்கழகத்தில் படித்தான்

இடைச்சொல் தொடர் : மாணவர்களே! படியுங்கள் உண்மையே பேசு