சுவாமிநாதம்168பொருளதிகாரம்
 

     உரை : ஆயன், குறும்பொறைநாடன், மனைவி, இடையர், இடைச்சியர்,
பாடி, முயல், கலை, கான்கோழி, மான், மல்லிகை, குருந்தம், பிடவம், முல்லை,
காயா, வரகு, கொன்றை, சாமை, முதிரை, குல்லை, தோன்றி, முருகு,
குறுஞ்சுனை, கான்யாறு, சாதாரி, முல்லையாழ், கொல் லேற்றுப்பறை, முதிரை
விற்றல், ஏறு தழுவுதல், குழல் ஊதல், தயிர் விற்றல், மூவின மேய்த்தல்,
கான்யாறு ஆடல், ஆகியன முல்லையின் கருப்பொருள்கள்.

     விளக்கம் : இது நம்பியகப் பொருள் 22ஆம் சூத்திரத்தை ஒட்டியது.

77. தன்னிகரில் இந்திரன்,ஊ ரன்,கிழத்தி, கடையர்,
     தக்ககடைச் சியர்,நான்கு குலத்தார்,வே சையர்கள்
அன்னம்,அன்றில், நாரை, கம்புட், குருகு,எருமை, தாரா,
     ஆறு,நீர்நாய், பொய்கை,மனைக் கிணறு,பேரூர், கன்னல்,
சென்னெல்,அங் காடி,காஞ்சி, வஞ்சி,மருதங், கமுகஞ்,
     சங்கு,வளை, பலா,மா, வாழை, கழுநீர்,
தென்னை,வயற் கனிவருக்கங், கிழங்குவருக் கங்கள்
     சேனையொடு, கருணை,மஞ்சள், சேம்பு,சோ லைகளே.  [7]

மருதத்துக்குரிய கருப்பொருளைத் தொகுத்துரைக்கின்றது.

     உரை : இந்திரன், ஊரன், கிழத்தி, கடையர், கடைச்சியர், நான்கு
குலத்தார், வேசையர், அன்னம், அன்றில், நாரை, கம்புள், குருகு, எருமை,
தாரா, ஆறு, நீர்நாய், பொய்கை, வீட்டுக்கிணறு, பேரூர், கன்னல், செந்நெல்,
அங்காடி, காஞ்சி, வஞ்சி, மருதம், கமுகு, சங்கு, வளை, பலா, மா, வாழை,
கழுநீர், தென்னை, கனிவருக்கம், கிழங்கு வருக்கம், சேனை, கருணை,
மஞ்சள், சேம்பு, சோலை ஆகியன மருதத்திற்குரிய கருப்பொருள்கள்.

78. சோலையிடை குயில்,வண்டு, மயில்,கவிபூந் தோட்டம்.
     சொன்னமதிழ்க், கூடகோபு ர(ம்),மேடை, மாடம்,
வேலி,மாளிகை, கோவில்,குள(ம்), நதி,நீ ராடல்,
     வியன்கிணைமங் கல(ம்),முழவு, மருதயாழ், தண்பண்,